நடராஜன்

நடராஜன் கைது : ஜெ வின் தப்பான மூவ்

Posted on

இந்த பதிவை ஜஸ்ட் .. ஒரு சில சேயிங்ஸ். சில பழமொழிகள் .சில மனோதத்துவ உண்மைகளை வைத்தே ஒப்பேற்றுகிறேன். தமிழ் நாடு போலீஸ் சித்தூர் வர எம்மாம் நேரம் ஆகும்ங்கறிங்க. பாடி தாங்காது வாத்யாரே. ஜோதிடம் 360 புத்தக கட்டு வேற வீடு வந்து சேர்ந்துருச்சா. முன் பதிவு பண்ணவுகளுக்கு மட்டுமாச்சும் கூரியர்ல புக் பண்ண திங்கள் வரை ஃப்ரீயா இருக்கனும்ல.

எச்சரிக்கை: ஆருனா அம்மா ரசிகர்கள் இதை படிச்சா உ.வ படாதிங்க. நம்மை பொறுத்தவரை அம்மா ஒரு ஜெயிக்க வேண்டிய குதிரை .நாமளும் கொஞ்சம் கட்டியிருக்கம். உங்களுக்கு உண்மையிலயே அம்மா மேல அக்கறை இருந்தா இந்த பதிவை அப்படியே சூடா ஒரு ப்ரிண்ட் எடுத்து ஃபேக்ஸ் பண்ணுங்க. அல்லது மெயில் பண்ணுங்க. ( மெயில் எல்லாம் பூட்டகேஸுதான் – மோடிக்கு மெயில் பண்ணாலே விளம்பரம் தான் பதிலா வருது – நம்ம கலாம் அய்யாவுக்கோ ,பி.எம் சாமிக்கோ (மவுன) அனுப்பினா அந்த இழவும் கிடையாதுங்கோ )

இப்பம் பயமொழிக்கு போயிருவமா?

1.எதிரிக்கு சொல்லக்கூடாததை நண்பனுக்கும் சொல்லாதே ( சொன்னதால – ஒரு சிலதை சொல்லி செய்யவச்சதாலதானே இத்தீனி இமிசை)

2.பயத்துல உள்ளவுக தான் பயமுறுத்துவாய்ங்க.

3. வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட – குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்குதான் பவர் சாஸ்தி..

4.பூனையை விரட்ட ஒரு சன்னலை திறந்து வச்சு அடிக்கனும். இல்லாட்டி நம்ம மேல பாஞ்சுரும்.

5.தில்லானவன் சொல்லி அடிப்பான். பேதியானவன் பீதியில சொல்லாம அடிப்பான். காட்டடி அடிப்பான்.

6.அதிகாரம் ஒரு கண்ணாடி மாளிகை . அதுக்குள்ளருந்து கல்லெறிய கூடாது.

7.உக்ரமான யுத்தம் பண்ணாலும் சமாதானத்துக்கு ஒரு சன்னலை திறந்து வைக்கனும். திக்காவே ஃப்ரெண்ட்ஷிப் பண்ணாலும் திடுக் திடுக்குன்னு செக் வைக்கனும்.

8.சதியை முழுக்க டிஸ்க்ளோஸ் பண்ணனும்னா அதை பற்றி தெரியாத மாதிரி இருக்கனும். நமக்கு தெரிஞ்சு போச்சுன்னு அவிகளுக்கு தெரிஞ்சுபோச்சுன்னா விட்டுப்பிடிக்கனும். விரட்டி அடிச்சா என்னைக்கோ அமல் செய்யவேண்டிய சதியை சடுதியில அரங்கேற்றிருவாய்ங்க.

9.ஒரு எதிரியையோ சதிகாரனையோ போட்டு தாக்க இன்னொருத்தர் உதவி நிச்சயம் தேவை. அப்படி உதவியை பெறும்போது நம்ம பலகீனங்கள் உதவிகளுக்கு பகிரங்கமாக சான்ஸ் இருக்கு.

10.ரகசியமா நடந்ததை ரகசியமாவே தீர்த்துக்கனும்.

கருத்து:
சசிகலா வெறும் சசிகலா தான். திவாகரன், அந்த கரன் இந்த கரன் எல்லாம் சாதா கரன்கள் தான். ஆனால் ந்டராசன் தன் மேல ரங்கோலி மாதிரி என்னென்னமோ கலர் எல்லாம் பூசி வச்சிருக்கிற பார்ட்டி. கண்டுக்காம விட்டிருந்தா காணாம போயிருக்கவேண்டிய பார்ட்டி. கண்டுக்காம இருந்தப்பயே “கண்டுக்கங்க கண்டுக்கங்க”ன்னு லேகியம் வித்த பார்ட்டி. இப்பம் கண்டுக்கிட்டதால – அன்னாரின் லேகியம் ஈஸியா சேல்ஸ் ஆகும். இதான் அம்மா அவருக்கு செய்த உதவி..